நெல்லையில் முரசொலி மாறன் சிலை - திமுக எம்.எல்.ஏ. தகவல்
நெல்லை: திருநெல்வேலியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை நிறுவப்படும் என திமுக எம்.எல்.ஏ மாலை ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லையில் மாலைராஜா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், நெல்லைக்கு அருகிலுள்ள தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முழு உருவச்சிலை அமைப்பதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆறேகால் அடி உயரத்தில் முரசொலி மாறன் முழு உருவ வெண்கலசிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின், மு.க.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
நெல்லை மேயர் ஏ.எல் சுப்பிரமணியன், அமைச்சர் மைதீன் கான், மற்றும் மாநகர திமுக நிர்வாகிகள் இணைந்து, திறப்பு விழாவை பிரமண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications