பாண்டியன் உள்பட ரயில்களில் சைட் மிடில் பெர்த் ரத்து
மதுரை: பயணிகளுக்கு பெருத்த கஷ்டத்தைக் கொடுத்த சைட் மிடில் பெர்த் வசதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. மோகனின் முயற்சியால் பயணிகளுக்கு மோட்சம் கிடைத்துள்ளது.
இது குறித்து எம்.பி. மோகன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்ற ஆண்டு நவம்பரில் பாண்டியன் அதி விரைவு ரயில் வண்டிப் பெட்டிகளில் நெடுக்குவாட்டில் கீழ் மற்றும் மேல் படுக்கைகளுக்கு நடுவில் மூன்றாவது படுக்கை ஒன்றை ரயில்வே நிர்வாகம் பொருத்தியது.
இதனால் ஒரு பெட்டிக்கு 9 படுக்கை வசதிகள் கூடுதலாக கிடைத்தன. இதன் காரணமாக லோயர் மற்றும் மிடில் பெர்த்துகளுக்கு இடையே உள்ள இடைவெளி வெறும் 52 சென்டிமீட்டர் ஆகக் குறைந்தது.
இதனால் பயணிகளுக்கு போதுமான வெளிச்சம், காற்று கிடைக்கவில்லை. இடித்துக் கொள்ளாமல் புரண்டு படுக்க முடியாது. படுத்தவர்கள் எழுந்து உட்கார முடி யாது.
இவைகளை நேரில் சென்று கண்டறிந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகன், புதிதாகப் பொருத்தப்பட்ட மிடில் பெர்த்தை உடனடியாக அகற்றச் சொல்லி ரயில்வே நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதினார்.
அவருடைய கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்று, அதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக ரயில்வே நிர்வா கத்திற்கு மோகன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications