திருமங்கலத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
மதுரை: திருமங்கலம் தொகுதியில் தனது நான்கு நாள் பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று பிற்பகல் தொடங்கினார்.

திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து தனது நான்கு நாள் பிரசாரத்தை இன்று தொடங்கினார் ஜெயலலிதா.

இதற்காக இன்று பிற்பகல் இரண்டே முக்கால் மணியளவில் அவர் மதுரைக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார். சிறப்பு விமானத்தில் வந்த அவரை ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவினர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து அழகர் கோவில் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு ஜெயலலிதா சென்றார். வழியெங்கும் பெரும் திரளான அதிமுகவினர் திரண்டிருந்து ஜெயலலிதாவை வரவேற்றனர்.

வழியெங்கும் தாரை தப்பட்டைகள் முழங்க பிரமாண்ட வரவேற்பு ஜெயலலிதா தரப்பட்டது.

பின்னர் மாலை 4.30 மணிக்கு ஹோட்டலிலிருந்து கிளம்பி பெருங்குடிக்கு வந்து சேர்ந்த ஜெயலலிதா அங்கிருந்து தனது வேன் மூலமான பிரசாரத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் பிரசாரம் மேற்கொள்கிறார் ஜெயலலிதா. பின்னர் 6ம் தேதி அவர் திருமங்கலத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+