55,000 எண்ணை நிறுவன அதிகாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

Petrol station
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 55 ஆயிரம் பொதுத்துரை எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் தொடங்கியுள்ளது. இதையடுத்து காஸ் விநியோகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இருப்பினும் விமான சேவையில் இதுவரை பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் சங்கத் தலைவர் அமீத் குமார் கூறுகையில், காலை 6 மணி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து நிறுவன அதிகாரிகளும் இதற்கு ஆதரவளித்துள்ளனர், பங்கேற்றுள்ளனர் என்றார்.

இந்த ஸ்டிரைக் காரணமாக ஹஜிரா - விஜய்பூர்- ஜெகதீஷ்பூர் எண்ணைக் குழாய் மூலம் காஸ் விநியோகம் செய்வது தடைபட்டுள்ளது.

ஸ்டிரைக் காரணமாக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிக்கப்படவில்லை என்று இந்தியன் ஆயில் தலைவர் சர்தாக் பெஹுரியா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+