'நம்புங்கோ நம்புங்கோ'.. அன்பளிப்பு தான் கொடுத்தாராம் ஸ்டாலின்

திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து பல்வேறு கிராமங்களில் பேசிய ஸ்டாலின் மையிட்டான்பட்டியில் பேசுகையில்,
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கிராமத்தில் மட்டும் ரூ. 32.72 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கிராமத்திற்கு இன்னும் ரூ. 55 லட்சம் செலவில் பணிகள் நடக்கவுள்ளன.
ஒரு கிராமத்துக்கு இவ்வளவு என்றால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு பணிகள் நடந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இன்னும் 3 மாதம் கழித்து நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. ஓட்டுக்களை வாங்கி விட்டு பணிகளை செய்யாமல் இருந்தால் நீங்கள் பின்னால் எங்களை எப்படி ஊருக்குள் அனுமதிப்பீர்கள்?.
சொன்ன அனைத்து திட்டங்களையும் கண்டிப்பாக நிறைவேற்றி கொடுப்போம். அனைத்து குடும்பத்தினருக்கும் கலர் டிவி, கேஸ் அடுப்பு போன்றவை கண்டிப்பாக வழங்கப்படும்.
திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு நான் பணம் கொடுத்ததாக ஒரு தொலைக்காட்சி திரும்ப, திரும்ப செய்தி வெளியிட்டு வருகிறது.
நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. எந்த வாக்காளர்களுக்கும் நான் பணம் கொடுக்கவில்லை. நான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு குழந்தையை என்னிடம் கொடுத்து பெயர் வைக்கும்படி கூறினார்கள். அந்த குழந்தைக்கு பெயர் சூட்டிய நான் அன்பளிப்பு கொடுத்தேன்.
பொதுவாக ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டும்போது அன்பளிப்பு கொடுப்பது தமிழர்களின் கலாச்சாரம். அதுபோல் அந்த குழந்தைக்கு அன்பளிப்பு கொடுத்ததை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சொல்கிறார்கள். அதைப்பற்றி கவலையில்லை.
ஜெயலலிதா தனது பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டுகளில் பணம் போட்டுள்ளார். இதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது. என்மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஜெயலலிதா தோல்வி பயம் காரணமாக இதுபோன்று தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார் என்றார்.
தயாநிதி-அழகிரியும் பிரச்சாரம்:
பல்வேறு பகுதிகளில் மு.க.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரும் ஸ்டாலினுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.மீனாட்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், வாக்காளர்களை பார்த்து எங்களில் யார் முதலில் பேச வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர்கள் முதலில் அழகிரி பேச வேண்டும் என்றனர்.
இதையடுத்து ஸ்டாலினிடமிருந்து மைக்கை வாங்கிய அழகிரி, என்னை விட திமுகவுக்காகவும், உங்களுக்காகவும் அதிகம் உழைத்தவர் மு.க.ஸ்டாலின் தான். எனவே அவர் தான் முதலில் பேச வேண்டும் என்றார்.
இதையடுத்து ஸ்டாலின் பேச அடுத்துப் பேசிய அழகிரி, திமுகவுக்கு வாக்களியுங்கள். எப்போதும் எங்களை பிரித்து பார்க்க வேண்டாம் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications