பெட்ரோல் வினியோகப் பணியில் ராணுவம்?
டெல்லி: பொதுத்துறை எண்ணை நிறுவன அதிகாரிகளின் ஸ்டிரைக்கால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள பெட்ரோல், டீசல் விநியோகத்தை சீரமைக்க ராணுவத்தை ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கடந்த புதன்கிழமை முதல் பொதுத்துறை எண்ணை நிறுவன அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. சுத்திகரிப்பு ஆலைகளிலும் பணிகள் முடங்கியுள்ளன. ஓ.என்.ஜி.சி நிறுவனம் குழாய்கள் வழியாக எரிவாயுவை அனுப்புவதை நிறுத்தி விட்டது.
இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து நேற்று பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா பேச்சு நடத்தினார். நள்ளிரவு வரை நீடித்த இந்தப் பேச்சுவாரத்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை, முரளி தியோரா சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். மீண்டும் அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச மாட்டோம் என்றார்.
ராணுவம் வருகிறது ..
இதற்கிடையே பெட்ரோல், டீசல் விநியோகத்தை சீரமைக்க ராணுவத்தை பணியில் ஈடுபடுத்த பெட்ரோலியத்துறை தீர்மானித்துள்ளதாக அத்துறைச் செயலாளர் பாண்டே தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன்












Click it and Unblock the Notifications