முடிகிறது ஸ்டிரைக்: ஓ.என்.ஜி.சி தவிர அனைனவரும் வாபஸ்
டெல்லி: கடந்த புதன்கிழமை முதல் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முக்கிய பொதுத்துறை எண்ணை நிறுவன அதிகாரிகள் சங்கங்கள் திரும்பப் பெற்று விட்டன. ஓ.என்.ஜி.சி. மட்டும் இன்னும் ஸ்டிரைக்கை தொடருகிறது.
கடந்த புதன்கிழமை முதல் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களின் அதிகாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர்கள் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்தியாவே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு நிலைமை மோசமாகியது.
இதையடுத்து ராணுவத்தை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு தீர்மானித்தது. மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சரமாரியாக சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். வேலைக்கு வராதவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேலைநிறுத்தத்திலிருந்து விலகுவதாக முதலில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிறுவன அதிகாரிகள் அறிவித்தனர்.
மேலும், பிபிசிஎல்லின் பெட்ரோல், டீசல் சப்ளை உடனடியாக தொடங்கியது.
இதையடுத்து ஆயில் இந்தியா நிறுவனம், கெய்ல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் ஸ்டிரைக்கை விடுவதாக அறிவித்தன.
கடைசியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் சங்கம் ஸ்டிரைக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
இந்தியாவின் மிகப் பெரிய எண்ணை பொதுத்துறை நிறுவனம் இந்தியன் ஆயி்ல் கார்ப்பரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கடந்த புதன்கிழமை முதல் அலைக்கழித்து வந்த எரிபொருள் பிரச்சினை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
அதேசமயம், எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி) நிறுவன அதிகாரிகள் சங்கம் இன்னும் ஸ்டிரைக்கை நீடித்து வருகிறது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன்












Click it and Unblock the Notifications