ராமலிங்கராஜு வீட்டில் செபி அதிகாரிகள் ரெய்டு
Subscribe to Oneindia Tamil

நேற்றே ராமலிங்கராஜுவின் வீட்டை ரெய்டு போட செபி அதிகாரிகள் குழு வந்து விட்டது. ஆனால் நேற்று செபி அதிகாரிகள் அங்கு சென்றபோது ராஜு வீட்டில் இல்லை. அவர் வெளிநாட்டுக்குத் தப்பி விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ராஜு எங்கும் ஓடவில்லை. இந்தியாவில்தான் இருக்கிறார் என ராஜு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் இன்று ராஜுவின் ஹைதராபாத் வீட்டில் செபி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அனேகமாக இன்றே ராமலிங்க ராஜு கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications