For Daily Alerts
Just In
வைகோ மீது வழக்கு தொடருவேன்: மு.க.அழகிரி
மதுரை: என்னைப் பற்றி அவதூறாகப் பேசிவரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குத் தொடருவேன் என மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.அழகிரி கூறுகையில், திருமங்கலம் தொகுதிக்குள் என்னை நுழைய விடக்கூடாது என்று ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகிறார்.
இதிலிருந்தே அவர் என்னைப் பார்த்து அஞ்சி அரசியல் நடத்துகிறார் என்பது தெளிவாகிறது.
என்னைப் பற்றி பொது மேடைகளில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார். இதற்காக அவர்மீது வழக்குத் தொடர உள்ளேன் என்றார்.
திருமங்கலம் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடும் பட்சத்தில் அன்றே வைகோ மீது வழக்கு தொடர திமுக தரப்பு தயாராகி வருகிறது என்று திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Comments
Story first published: Friday, January 9, 2009, 15:20 [IST]