பெட்ரோல், டீசல் படிப்படியாக சீரடைகிறது
டெல்லி: எண்ணை நிறுவன அதிகாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு விட்டதால், பெட்ரோல், டீசல் விற்பனை படிப்படியாக சீரடையத் தொடங்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் எண்ணை நிறுவன அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பெட்ரோல், டீசல் பஞ்சம் ஏற்பட்டு நாடே ஸ்தம்பித்தது. விமானப் போக்குவத்தும் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. சில மாநிலங்களில் எஸ்மா சட்டம் பிரயோகிக்கப்பட்டது. மேலும் எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் இரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இனியும் பேச்சு நடத்த முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை எச்சரிக்கை விடுத்தது.
மேலும், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இதையடுத்து நேற்று இரவு படிப்படியாக ஒவ்வொரு எண்ணை நிறுவனமும் தங்களது வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டன.
இதைத் தொடர்ந்து உடனடியாக பெட்ரோல் பங்குகளுக்கு எரிபொருள் சப்ளை தொடங்கியது. இன்றைக்குள் நிலைமை சரியாகி விடும் என பெட்ரோலியத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் படிப்படியாக பெட்ரோல் பங்குகள் திறக்கப்படடு விற்பனை நடக்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும் இன்னும் முழுமையாக நிலைமை சரியாகவில்லை.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு












Click it and Unblock the Notifications