சத்யம் போர்டுக்கு 3 இயக்குநர்களை நியமித்தது அரசு
Subscribe to Oneindia Tamil

சத்யம் நிறுவனத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வேலைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
முதல் நடவடிக்கையாக, சத்யம் போர்டைக் கலைத்து உத்தரவிட்ட மத்திய அரசு அதற்கு புதிதாக பத்து பேர் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது.
அதன்படி இன்று, எச்டிஎப்சி வங்கியின் தலைவர் தீபக் பரேக், நாஸ்காம் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் மற்றும் செபியின் முன்னாள் உறுப்பிர் சி அச்சுதன் ஆகியோர் சுயேச்சை இயக்குநர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இத் தகவலை மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் பிசி குப்தா தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவனத்துக்கு மேலும் 7 இயக்குநர்கள் நியமனத்தையும் அரசே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications