சத்யம் ராஜு பிரதர்ஸ் வீடுகளில் அதிரடி சோதனை
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு மற்றும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வாட்லாமணி சீனிவாஸ் ஆகியோர் வீடுகளில் ஆந்திர மாநில குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
முக்கிய ஆவணங்கள் பல கிடைக்கவில்லை என்றும், அவரது லாப்டாப்பை மட்டும் கைப்பற்றியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் முழுவதும் சத்யம் நிறுவனத்தின் தலைமை அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, நிறைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லாப்டாப்பை ராஜு முன்னிலையில் திறந்து சோதிக்கவிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாளை இயக்குநர் குழுக் கூட்டம்!
இந்நிலையில் சத்யம் இயக்குநர் குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. புதிய தலைவர் தேர்ந்தடுப்பு மற்றும் நிர்வாக சிக்கல்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.
இன்று காலைதான் சத்யம் இயக்குநர் குழுவுக்கு 3 புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் 7 இயக்குநர்கள் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படுகிறார்கள்.