வரதட்சணை வழக்குகள்: மண வீட்டார் ஒப்பந்தம் தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: வரதட்சணைக் கொடுமை மற்றும் அதுதொடர்பான மரண வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க மண வீட்டாருக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரேம் கன்வார். இவரது மருமகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராஜஸ்தான் போலீஸார் தொடர்ந்த வழக்கில் கன்வாருக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கன்வார் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வரதட்சணை வாங்கியது தொடர்பான ஆதாரம் எதுவும் போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை. மேலும், தனக்குத்தானே தீவைத்துத் தற்கொலை செய்து கொண்டார் எனது மருமகள். என்னால்தான் அவர் மரணத்தைத் தழுவினார் என்பதற்கான ஆதாரத்தையும் போலீஸார் நிரூபிக்கவில்லை.
வரதட்சணை பெற்றதற்கான ஒப்பந்தம் எதுவும் போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் அரிஜித் பச்சாயத் மற்றும முகுந்தகம் சர்மா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல. இந்திய குற்றவியல் சட்டத்தின் 304 பி பிரிவில் வரதட்சணை குறித்து தெளிவாகவே உள்ளது.
இதுபோன்ற வழக்குகளில், மண வீட்டாருக்கிடையே வரதட்சணை கொடுப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. வரதட்சணை தொடர்பான ஒப்பந்தம் இருந்தால்தான் யாரையும் தண்டிக்க முடியும் என்றால் இந்த நாட்டில் எந்த வரதட்சணைக் கொடுமை வழக்குக்கும் தீர்வு கிடைக்காது. யாரும் தண்டிக்கப்படவும் முடியாது.
ஒருவரிடம் பொருளையோ அல்லது பணத்தையோ கேட்டு வாங்கியிருந்தாலே அது குற்றச் செயலாக கருதப்பட வேண்டும். வரதட்சணை தொடர்பான சட்டப் பிரிவு அதைத்தான் வலியுறுத்துகிறது.
எனவே இதுபோன்ற வழக்குகளில் வரதட்சணை தொடர்பான ஒப்பந்தம் கட்டாயம் தேவை என்று வலியுறுத்தத் தேவையில்லை என்று உத்தரவிட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications