சத்யம் மீட்பு முயற்சி - செபி தலைவருடன் பிரதமர் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு உயிர் கொடுப்பது தொடர்பாக செபி அமைப்பின் தலைவருடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், மத்திய அரசு நியமித்த 3 உறுப்பினர் இயக்குநர் குழு இன்று ஹைதராபாத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிர்வாகத்தை சீராக நடத்தும் வகையில் 3 இயக்குநர்களை மத்திய அரசு நேற்று அறிவித்தது. தீபக் பரேக், கிரன் கார்னிக், முன்னாள் செபி உறுப்பினர் அச்சுதன் ஆகியோரே அவர்கள்.

இந்த மூன்று பேரும் இன்று ஹைதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை தொய்வின்றி நடத்த்த தேவையான நடவடிக்கைகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

இன்போசிட்டியில் உள்ள சத்யம் தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாலையில் செய்தியாளர்களை சந்திக்க 3 பேரும் திட்டமிட்டுள்ளனர். அப்போது இயக்குநர் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியிடப்படும். பரேக் தலைவராக தேர்ந்தெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஹைதராபாத்தில் உள்ள சத்யம் அலுவலகத்தில் ஊழியர்கள் வழக்கமான முறையில் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் எந்தவித பீதியும், அச்சமும் இல்லை. நம்பிக்கை அதிகரித்திருப்பதை உணர முடிகிறது.

இந்த நிலையில் செபி அமைப்பின் தலைவர் சி.பி. பவே, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் அழைப்பின் பேரில் பவே, அவரை சந்தித்தாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+