ராமேஸ்வரம் வரும் பர்னாலாவுக்கு கொலை மிரட்டல்
ராமேசுவரம்: ராமேஸ்வரம் வரவுள்ள ஆளுநர் பர்னாலாவை வெடிகுண்டு வைத்துக் கொல்லப் போவதாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ஆளுநர் விஜயம் செய்யுள்ள ராமேஸ்வரம் குருத்வாராவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் பர்னாலா வருகிற 15-ம் தேதி ராமேசுவரத்தில் உள்ள குருத்துவாரா சிங் மடத்துக்கு செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார், எஸ்.பி. செந்தில்வேலன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ராமேசுவரம் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் செல்போனுக்கு ஒரு மர்மபோன் வந்தது. அதில் பேசிய நபர் ஆளுநரை வெடி குண்டு வைத்து கொல்வோம்'' என்று மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பாண்டியன் ராமேசுவரம் டி.எஸ்.பி. கமலாபாயிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி அதே பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் செல்போனில் பதிவான அந்த டெலிபோன் நம்பரை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications