கொழும்பில் மேனன் - நாளை ராஜபக்சேவுடன் பேசுகிறார்
கொழும்பு: கொழும்பு வந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் இன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாயா ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதிபர் ராஜபக்சேவை நாளை சந்திக்கிறார்.
இலங்கை அரசு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நிறுத்த வேண்டும். இதை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்று நேரில் வலியுறுத்த வேண்டும் என தமிழகத்திலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதியும், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரணாப் கொழும்பு செல்வது குறித்து உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கதவை உடைத்துக் கொண்டு கொழும்புக்குப் போய் விட முடியாது. போர் நிறுத்தம் குறித்தும் பேசும் மன நிலையில் இலங்கை இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்குப் பதில் மேனனை மத்திய அரசு கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
நேற்று இரவு மேனன் கொழும்பு புறப்பட்டுச் சென்றார். இன்று காலை அவர் வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா, வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோதபாயா ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
அதிபர் ராஜபக்சே கண்டி சென்றுள்ளதால், நாளை அவரை மேனன் சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது, இலங்கைப் பிரச்சினையில் தீர்வு, அமைதியை ஏற்படுத்துவது ஆகியவை குறித்து மேனன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்துவாரா என்பது தெரியவில்லை.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications