வேலை போய் விடுமோ என்ற பயத்தில் சத்யம் ஊழியர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

Sathyam
சென்னை: வேலை போய் விடுமோ என்ற பயத்தில் சென்னை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லையைச் சேர்ந்தவர் விஷ்வா வெங்கடேசன். இவர் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியால் வேலை போய் விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வந்த வெங்கடேசன் நேற்று தாம்பரம் ரயில் நிலையத்தில் அமர்ந்து விஷம் குடித்து விட்டார்.

உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வெங்கடேசன்.

சத்யம் நிறுவனத்தின மோசடி செயல்கள் அம்பலமாகி செய்திகளில் அடிபட ஆரம்பித்தபோதே மனம் உடைந்து இரு முறை தற்கொலைக்கு முயன்றாராம் வெங்கடேசன். இருப்பினும் காப்பாற்றப்பட்டு விட்டார். ஆனால் இம்முறை அவரை மரணம் வென்று விட்டது.

வெங்கடேசன் செம்பியத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவரது அலுவலகம் வேளச்சேரியில் உள்ளது.

தாம்பரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+