அமிர்தசரஸில் மன்மோகன் Vs சித்து?

வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரமாகியுள்ளது.
சித்துவை அமிர்தசரஸில் நிறுத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. இந் நிலையில் அந்தத் தொகுதியில் மன்மோகன் சிங் போட்டியிட்டால் வெற்றி உறுதி என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தலைமையிடம் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் பாஜகவின் முக்கிய வேட்பாளரை தோற்கடிப்பதோடு வெற்றியும் உறுதி என சோனியா கருதுகிறார்.
அதேபோல பாஜக தலைவர் அத்வானி வழக்கம்போல குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து யாரை நிறுத்தினாலும் அத்வானியின் வெற்றி உறுதி என காங்கிரஸ் கருதுகிறது.
மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் மீண்டும் போட்டியிடலாம் என்றும் கருதப்படுகிறது. அவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள தொகுதியி்ல் நிற்கலாம். இங்கு அவரை எதிர்த்து நடிகர் சஞ்சய் தத்தை நிறுத்த சமாஜ்வாடி கட்சி முடிவு செய்துள்ளது. இதை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.
பாஜகவில் மாதி விமானப் படையின் தளபதி:
இதற்கிடைய முன்னாள் விமானப் படைத் தலைவர் ஏர் சீப் மார்ஷல் அனில் யஷ்வந்த் டிப்னிஸ் பாஜகவில் இணையவுள்ளார்.
இது குறித்து பாஜகவுடன் அவர் பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications