வன்னியில் ராணுவம் ராக்கெட் தாக்குதல் - 17 அப்பாவிகள் பலி
கொழும்பு: வன்னியில் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 17 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
முல்லைத் தீவை பிடிக்க அதை சுற்றி வளைத்து மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது ராணுவம். இதில் சிக்கி கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர் அப்பாவித் தமிழர்கள்.
குடியிருப்புகளையும் விடாமல் தொடர்ந்து தாக்கி வருகிறது ராணுவம்.
வன்னி பகுதியில் சுதந்திரபுரம் சந்திப்பில் உள்ள குடியிருப்புகள் மீது ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் ஏராளமான வீடுகள் இடிந்தன. உடையார் கட்டு, விசுவமடு, தேவிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்றது.
ராணுவத்தின் ராக்கெட் தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 51 பேர் காயம் அடைந்தனர். அகதிகளாக தஞ்சம் புகுந்த முகாம்கள் மீதும் ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
முல்லைத்தீவு கடற்பரப்பில் சிங்கள கடற்படையினர் மீது கடற்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தியதில் கடற் படையினர் டோரா படகு மூழ்கடிக்கப்பட்டது. இதில் 15 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications