வி.சிறுத்தை பிரமுகர் மீது பாய்ந்த 'குண்டாஸ்'
விழுப்புரம்: இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் பஸ்களுக்கு தீ வைத்து எரித்த அந்தக் கட்சியின் பிரமுகர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் 4 பஸ்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 37 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
மேலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தியது தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 156 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர சாலை மறியல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வன்முறையின்போது பேருந்துகள், ஓட்டுனர்கள், கண்டக்டர்களைத் தாக்கி பொது மக்களை பீதியடையச் செய்து பேருந்துகளுக்கு தீ வைத்த கண்ணன் (34) என்ற விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலெக்டரின் உத்தரவின் பேரில் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம்












Click it and Unblock the Notifications