வி.சிறுத்தை பிரமுகர் மீது பாய்ந்த 'குண்டாஸ்'
விழுப்புரம்: இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் பஸ்களுக்கு தீ வைத்து எரித்த அந்தக் கட்சியின் பிரமுகர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் 4 பஸ்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 37 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
மேலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தியது தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 156 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர சாலை மறியல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வன்முறையின்போது பேருந்துகள், ஓட்டுனர்கள், கண்டக்டர்களைத் தாக்கி பொது மக்களை பீதியடையச் செய்து பேருந்துகளுக்கு தீ வைத்த கண்ணன் (34) என்ற விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலெக்டரின் உத்தரவின் பேரில் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.