ஜன. 26ல் திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா தொடக்கம்
மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா ஜன. 26-ம் தேதி தொடங்குகிறது.
ஆண்டுதோறும் தை மாதத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதையொட்டி, தெப்பக்குளத்தில் மின் மோட்டார் உதவியுடன் தண்ணீர் நிரப்பும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு தங்கச் சப்பரத்திலும், இரவு 8 மணிக்கு தெய்வானையுடன் சுவாமி பல்வேறு வாகனங்களிலும் திருவீதி உலா நடைபெறும்.
பிப்ரவரி3-ம் தேதி தை கார்த்திகையையொட்டி காலை 8 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு சிறிய தேரோட்டமும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 4-ம் தேதி காலை 11 மணிக்கு தெப்பத்தில் சுவாமி, தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணியளவில் மைய மண்டபத்தில் உலா வருதலும், இரவு 8 மணிக்கு தெப்பத்தில் மின்னொளியில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications