கன்னியாகுமரியில் எலிக் காய்ச்சலுக்கு 2 பேர் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவி வரும் எலிக் காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சலால் கடந்த ஆண்டு பலர் பாதிக்கப்பட்டனர். உயி்ர் இழப்பும் ஏற்பட்டது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. நாகர்கோவிலில் பலர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவன் ஒருவன் காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சுகாதார துறையினர் டெங்கு அறிகுறி இல்லை என கூறி விடுகின்றனர்.
இருப்பினும் மாவட்டம் முழுவதும் கொசுத்தொல்லை பெருகியுள்ளது. இவை ஒருபுறம் இருக்க குமரி மாவட்டத்தை ஓட்டிய கேரள மாநில பகுதிகளான பறசாலை, பொழியூர், உள்ளிட்ட இடங்களில் எலிகாய்ச்சல் பரவி வருகிறது.
பாறசாலை குளத்தூர் உச்சகட்டையை சேர்ந்த பானு, கோயில்விளை பொன்னுமுத்தன் ஆகிய 2 பேர் பலியாகியுள்ளனர். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
மேலும் குமரி-கேரள எல்லையை ஓட்டி 46 பேர் எலிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குமரி மாவட்ட மக்களையும் பீதி அடைய செய்துள்ளது.
திடீர் வாந்தி பேதி - தொழிலாளி பலி
தூத்துக்குடி பகுதியிலுள்ள முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, கோவங்காடு, பழைய கயல், தெர்மல் நகர், மீனவர் காலனி, ராஜபாண்டி நகர், ஆகிய பகுதிகளை சேர்ந்த 22 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்..
அவர்களுக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் உமா, உறைவிட மருத்துவ அதிகாரி விஸ்வநாதன், உதவி அதிகாரி சைலஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர சிகிக்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏரல் பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குணசெல்வம் என்பவர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்போது அரசு மருத்துவமனையில் 14 பெண்கள் உள்பட 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications