'ரா' தலைவராக கே.சி.வர்மா நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக உள்ள கே.சி.வர்மா, இந்திய உளவு அமைப்பான 'ரா' வின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1971ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி வர்மா. தற்போதுள்ள ரா தலைவர் அசோக் சதுர்வேதி ஜனவரி 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவரைத் தொடர்ந்து வர்மா புதிய தலைவராக பொறுப்பேற்பார்.
கடந்த 2005ம் ஆண்டு போதைப் பொருள் கட்டுப்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்துள்ளார் வர்மா. பின்னர் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு செயலராக பணியாற்றியுள்ளார்.
கடந்த மாதம் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக இவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. தற்போது ரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications