சம்பள கணக்கில் தில்லுமுல்லு; பிரதமர் அலுவலக ஊழியர் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சம்பள கணக்கில் தில்லுமுல்லு செய்து லட்சக் கணக்கில் பண மோசடி செய்ததாக பிரதமர் அலுவலக கிளர்க் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சீனியர் கிளர்க்காக பணியாற்றி வருபவர் விகாஸ் ராணா. சமீபத்தில் இவர் மீது அலுவலக பணத்தில் கையாடல் செய்ததாக அக்கவுன்ட்ஸ் துறையை சார்ந்த இணை செயலர் சைலி குமார், பாராளுமன்ற தெருவில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.

அவரது புகாரில், பிரதமர் அலுவலகத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தற்காலிகமாக பணியாற்ற வந்த நான்கு ஊழியர்களின் சம்பளத்தில் விகாஸ் ராணா கையாடல் செய்துள்ளார்.

அவர்கள் தங்கள் பழைய துறைக்கு சென்ற பின்னும் அவர்களுக்கு சம்பளம் அளித்துள்ளதாக கணக்கு எழுதியுள்ளார். அந்த பணத்தை வங்கியிலுள்ள தனது சொந்த கணக்கில் சேர்த்துள்ளார் என புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டது. டெல்லி போலீசின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவினர் அவரை கைது செய்தனர். அதன் அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம்.

இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+