இலங்கையைக் கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழக மீனவர்கள் 22 பேரை பிடித்துச் சென்றுள்ள இலங்கை கடற்படையினரை கண்டித்து, மல்லிபட்டினம் மற்றும் ஜெகதாபட்டின மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப் பட்டினம் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்கள், கடந்த 21-ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் எல்லையை மீறி வந்து மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றுள்ளனர். மேலும் அந்த மீனவர்கள் சென்ற 6 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதே போன்று, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் இலங்கை படையினர் பிடித்துச் சென்றனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் போகாத நிலையில், இலங்கை கடற்படையினர் அத்து மீறி, தமிழக மீனவர்களைக் கைது செய்திருப்பதாக மீனவர்கள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

நிலையில், தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லிவயல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள், கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற மீனவர்கள் உடனே விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ள கூறப்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+