புதுக்கோட்டை மாவட்ட ஜல்லிக்கட்டில் 110 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 110 பேர் காயமடைந்தனர்.
காட்டுப்பட்டி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான காளைகள் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டைக் காண நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 110 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் படுகாயமடைந்த 14 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications