பாராளுமன்ற தேர்தல்: பகுஜன் சமாஜ் தனித்து போட்டி
தென்காசி: பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று தென்காசியில் அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சுரேஷ் மனோஜி கூறினார்.
உ.பி முதல்வர் மாயாவதியின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தென்காசியில் பொதுகூட்டம் நடத்தது.
கூட்டத்தில் பொது செயலாளர் சுரேஷ் மனோஜி கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும். தேர்தல் ஆணையம் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் வழங்கியுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் நடந்த தேர்தலிலும் எங்களது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசத்தில் காங்கிரசுக்கு 10, பாஜகவிற்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
அனைத்து மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெரும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் எங்களது கட்சி தனித்து போட்டியிடும்.
தென்காசியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த இருக்கிறோம். தமிழக அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுப்போம் என்றார் சுரேஷ் மனோஜி.