For Daily Alerts
Just In
வேலூரில் பயிற்சி விமானம் நொறுங்கியது - பெண் விமானி தப்பினார்
வேலூர்: வேலூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக அதை ஓட்டிய பெண் பயிற்சி வி்மானி உயிர் தப்பினார்.
வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் விமான ஓட்டிகளுக்கான பயிற்சி மையம் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர்.
நேற்று இந்த மையத்தில், திணேஷ்வரி என்ற 22 வயது பெண் பைலட் விமானி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானம் நிலை தடுமாறியது. பின்னர் அப்படியே கீழே வந்து விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தின் முன் சக்கரம் மட்டுமே சேதமடைந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக திணேஷ்வரி உயிர் தப்பினார்.
விமானம் செயலிழந்ததால்தான் அது விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, January 26, 2009, 10:17 [IST]