ஆடு மேயக்க சென்ற பெண் கற்பழித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆடு மேயக்க சென்ற பெண் கற்பழித்துக் கொலை செயய்ப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ளது பேரளி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் விவசாயி நாகராஜ். இவரது மகள் வீரமணிக்கு(20) வாய் பேச முடியாது.

வீரமணி தினமும் வீட்டின் அருகில் உள்ள வனப்பகுதிகளில் ஆடு மேய்க்கச் செல்வார். வழக்கம் போல் நேற்றும் ஆடு மேய்க்க சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பதறிப் போன வீரமணியின் தந்தை வனப்பகுதிகளில் மகளை தேடி அலைந்தார்.

அப்போது வீரமணி பேரளிக்கும், பீல்வாடி என்ற பகுதிக்கும் இடையே உள்ள வனப்பகுதியில் அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைக் கண்டு கதறி அழுத நாகராஜன் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு வீரமணியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+