இலங்கை இனப்படுகொலை: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கவலை
Subscribe to Oneindia Tamil
ஐ.நா.: இலங்கையில், போரற்ற பாதுகாப்பு பிரதேசப் பகுதியில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பது கவலை தருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வன்னியில் தொடரும் முடிவற்ற மோதலில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.
இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் பாதுகாப்பை- மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்.
அனைத்து மக்களும் இடம்பெயர்வதை அரசும் விடுதலைப் புலிகளும் உறுதிசெய்ய வேண்டும்.
போர் அற்ற மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை மதிக்க வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications