For Daily Alerts
Just In
இலங்கை இனப்படுகொலை: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கவலை
ஐ.நா.: இலங்கையில், போரற்ற பாதுகாப்பு பிரதேசப் பகுதியில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பது கவலை தருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வன்னியில் தொடரும் முடிவற்ற மோதலில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.
இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் பாதுகாப்பை- மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்.
அனைத்து மக்களும் இடம்பெயர்வதை அரசும் விடுதலைப் புலிகளும் உறுதிசெய்ய வேண்டும்.
போர் அற்ற மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை மதிக்க வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
Story first published: Wednesday, January 28, 2009, 9:16 [IST]