பிரதமர் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்?
Subscribe to Oneindia Tamil

இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நன்றாக தேறி வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அவர் வேறு வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டதை அடுத்து மருத்துவ கண்காணிப்பு கருவிகள் அனைத்தும் நீக்கப்பட்டன.
திரவ உணவுக்கு பதிலாக, வழக்கமான உணவு உட்கொள்ள ஆரம்பித்தார். நேற்று தனது நலம் விரும்பிகளிடம் உற்சாகமாக பேசி மகிழ்ந்தார்.
இன்று காலை அவர் மருத்துவமனை தாழ்வாரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். தான் வழக்கமாக காலையில் செய்யும் உடற்பயிற்சிகளையும் அவர் செய்தார். அவரது உடல் நிலை எதிர்பார்த்தைவிட விரைவாக முன்னேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பும் வாய்ப்பு அதிமிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications