For Daily Alerts
Just In
பிரணாப் பயணம்: சட்டசபையில் அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ வெளிநடப்பு
இன்று காலை சட்டசபை கூடியதும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் குறித்த ஒரு அறிக்கையை அவை முன்னவரும், நிதியமைச்சருமான அன்பழகன் வாசித்தார்.
அப்போது மதிமுக உறுப்பினர்கள் எழுந்து, பிரணாப் முகர்ஜியின் பயணத்தால் தமிழர்களுக்கு எந்த பலனும் இல்லை. அவர், இலங்கைப் படைகளின் இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகளும் திருப்தி தரவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
Comments
admk அதிமுக சிபிஐ அரசியல் தமிழ்நாடு vck விடுதலைச் சிறுத்தைகள் mdmk மதிமுக pranab பிரணாப் இலங்கை விவகாரம் sri lankan வெளிநடப்பு walkout
Story first published: Thursday, January 29, 2009, 14:25 [IST]