ஜெயலலிதாவிடம் கூட்டணியை வலுப்படுத்தும் பொறுப்பு: பர்தன்
சென்னை: ஜெயலலிதாவின் முயற்சியால் உருவாகியுள்ள இடதுசாரிகள் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது, அதில் யாரையெல்லாம் சேர்ப்பது என்பது குறித்து ஜெயலலிதா முடிவு செய்வார். அவரே கூட்டணியையும் வலுப்படுத்துவார் என இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தன் கூறியுள்ளார்.
நேற்று மாலை சென்னையில் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் பர்தன் சந்தித்துப் பேசினார். அவருடன் தேசிய செயலாளர் ராஜா, மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் சந்திப்பு குறித்து பர்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் முயற்சியால் இடதுசாரிகள் வலுவான கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்த அணியை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறோம். இதற்கான பொறுப்பை ஜெயலலிதாவிடம் வழங்கியிருக்கிறோம். அவர், எந்த கட்சிகளை எல்லாம் கூட்டணியில் சேர்ப்பது என்பது குறித்து முடிவு செய்வார்.
பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பிப்ரவரி 2-வது வாரத்தில் இருந்து வியூகம் வகுத்து அதன் படி செயல்படுவோம்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் பணபலமும், அதிகார பலமும் சேர்ந்து விளையாடி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அது போன்ற சக்திகளை நாங்கள் முறியடிப்போம்.
3-வது அணி சம்பந்தமாக கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு செய்வோம். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
ஜெயலலிதா கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய விiகம் குறித்தும் பேசினோம் என்றார்.












Click it and Unblock the Notifications