நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் பிரதமர்?
டெல்லி: பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து நன்கு தேறி வரும் பிரதமர் மன்மோகன் சிங் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நன்றாக தேறி வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அவர் வேறு வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். நேற்று காலை அவர் மருத்துவமனை தாழ்வாரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். வழக்கமான காலைஉடற்பயிற்சிகளையும் அவர் செய்தார். அவரது உடல் நிலை எதிர்பார்த்தைவிட விரைவாக முன்னேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்கவிருக்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவதால் அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது.
இது குறித்து மும்பையில் உள்ள ஆசிய இதய இன்ஸ்ட்டியூட்டை சேர்ந்த டாக்டர் விஜய் டி சில்வா கூறுகையில், பிரதமர் நாளை மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இல்லையென்றால் ஞாயிற்றுக் கிழமை வீடு திரும்புவார் என்றார்.












Click it and Unblock the Notifications