அண்ணன் செய்தது தியாகம் - அதை நினைத்து ஆறுதல் அடைகிறேன்: முத்துக்குமாரின் தங்கை
சென்னை: எனது அண்ணனின் மரணம் குடும்பத்திற்கு பேரிழப்புதான். ஆனால், அவர் செய்தது தியாகம் என்பதால் அதை நினைத்து ஆறுதல் அடைகிறோம் என முத்துக்குமாரின் தங்கை தமிழரசி கூறியுள்ளார்.
முத்துக்குமாரின் ஒரே தங்கை தமிழரசி. 24 வயதாகும் அவரது வீட்டில்தான் தங்கியிருந்தார் முத்துக்குமார். தமிழரசியின் கணவர் கற்குவேல். தமிழரசி தற்போது நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.
அண்ணனின் உயிர்த் தியாகம் தமிழரசியை வெகுவாக பாதித்துள்ளது. அழுதபடியே உள்ளார்.
தமிழரசியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. சிறிய வாடகை வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார்.
அண்ணனை நினைத்தபடியே அழுதபடியும், சாப்பிடாமலும் இருக்கிறார் தமிழரசி. நிறைமாத கர்ப்பிணியாக அவர் இருப்பதால் அவரை உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் சமாதானப்படுத்தி அருகிலேயே இருந்து பார்த்து வருகின்றனர்.
வற்றாத கண்ணீருடன் தமிழரசி தனது குடும்பம் குறித்துக் கூறுகையில், எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கொழுவநல்லூர் என்ற கிராமம் ஆகும். அங்கிருந்து 10 வருடங்களுக்கு முன்பு பிழைப்புத் தேடி சென்னை வந்தோம். எனது தந்தை பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அதிலுள்ள வருமானத்தை வைத்துத்தான் குடும்பம் நடந்து வந்தது.
இந்த நிலையில், எனது தாயார் உடல்நலமின்றி இறந்துவிட்டார். அதுமட்டுமல்ல எனது மற்றொரு சகோதரர் வசந்தகுமார் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் விபத்தில் இறந்துவிட்டார்.
தாயையும் இழந்து சகோதரரையும் இழந்து நாங்கள் வாடிக்கொண்டிருந்தோம். இந்த நிலையில், எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. என்னுடன்தான் எனது அண்ணன் முத்துக்குமார் தங்கியிருந்தான். சினிமா டைரக்டராக வேண்டும் என்று விரும்பினான். உதவி இயக்குனராகவும் ஒரு நாடகத்திற்கு பணியாற்றினான்.
அதன்பிறகு, ஒரு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்தான். தினமும் காலையில் சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவான். எல்லோரிடமும் அன்பாக இருப்பான். எனக்கு அம்மா இல்லாத குறையை எனது அண்ணன்தான் போக்கினான்.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை 5 மணிக்கே எழுந்துசென்று விட்டான். மதியம்தான் என்னுடைய அண்ணனின் போட்டோ கேட்டு ஒருவர் வந்தார். அதன் பிறகுதான் அவன் தீக்குளித்த விஷயம் தெரிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கைகால் நடுங்கியது.
அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன். எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்று நினைத்தேன். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவன் இறந்த செய்தி கேட்டு துடித்தேன். அவன் இழப்பு எங்கள் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
எப்போதுமே தமிழர்கள், தமிழினம் என்றே தான் பேசிக்கொண்டிருப்பான். அவன் சிந்தனை கடல் போல பெரியது. எதையுமே சிறிய கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான். அவனை இழந்தது எங்களுக்கு பெரிய இழப்பாக இருந்தாலும் தமிழர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்ததை நினைத்து சற்று ஆறுதல் அடைகிறேன் என்றார் தமிழரசி.
முத்துக்குமாரின் தந்தை குமரேசனும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார். மகனின் பிரேதம் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கு அருகே அமர்ந்திருக்கிறார். அவருடன் உறவினர்களும் அங்கேயே அமர்ந்துள்ளனர்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்













Click it and Unblock the Notifications