இலங்கை: தீர்வு காண தொடர்ந்து முயற்சிப்போம் - கருணாநிதிக்கு பிரணாப் கடிதம்
சென்னை: இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்று கூறி மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த பிரணாப்பின் கடிதத்தை நிதியமைச்சர் அன்பழகன் நேற்று சட்டசபையில் வாசித்தார்.
கடிதத்தின் விவரம்:
நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில உடல் பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொண்டு வரும் செய்தி அறிந்து வருத்தமுற்றேன். இது சிறிய அளவிலான பிரச்சினையாக இருக்கவேண்டுமென்றும், நீங்கள் விரைவில் குணம் அடைவீர்கள் என்றும் நம்புகிறேன். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் உங்களது ஆதரவுக்கரம் எங்களுக்குத் தேவை.
கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கடந்த 27-ந் தேதி நான் மேற்கொண்ட பேச்சுவார்த்தை பற்றி உங்களுக்கு ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
இலங்கையில் போர் நடைபெற்று வரும் பகுதியில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும் வகையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்து இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று (ஜன.29) மாலை அறிவித்துள்ளார்.
போர் மூண்ட பகுதியில் சிக்கியிருக்கும் தமிழ் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்வகையில் தேவையான உத்தரவுகளை இலங்கை அரசு பிறப்பித்துள்ளதையும் நான் அறிகிறேன்.
போர்ப்பகுதியில் சிக்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வழிவகை செய்யும் விதத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கையில் நான் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியதை தாங்கள் அறிவீர்கள்.
இது தொடர்பாக, இலங்கை அதிபர் ராஜபக்சே, நமது வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோர் நேற்று (நேற்று முன்தினம்) வெளியிட்ட அறிக்கைகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
இலங்கையில் விரைவில் அமைதி திரும்புவதற்காகவும், அங்கு நல்ல அரசியல் தீர்வு ஏற்படுவதற்கும் இந்திய அரசு தொடர்ந்து பாடுபடும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்கள் நலனுக்காகவும், அவர்களுடைய நிலை மேம்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அதில் கூறப்பட்டிருந்ததாக அன்பழகன் தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications