புதுவையிலும் பிப். 4ம் தேதி பொது வேலை நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தமிழகத்தைப் போலவே, பிப்ரவரி 4ம் தேதி புதுச்சேரியிலும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த இலங்கைத் தமிழர் பாதுகாபபு இயக்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் அமலாக வேண்டும், இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி 4ம் தேதி தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

தற்போது புதுவையிலும் அன்றைய தினம் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் பா.ம.க., ம.திமு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாவாணன் தலைவர்

இக்கூட்டத்தில், தமிழகத்தைப்போல புதுவையிலும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பு செயலாளர் பாவாணன் செயல்படுவார்.

- இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகத்தைப் போல் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது.

- தொழிலாளர்கள் சுய வேலை மறுப்பு போராட்டத்திலும், கடை உரிமையாளர்கள் கடை யடைப்பு போராட்டத்திலும், மீனவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் இலங்கை தமிழர்களை காத்திட முன்வர கேட்டுக் கொள்கிறோம்.

- இதே கோரிக்கையை முன்வைத்து வருகிற 7-ந்தேதி கறுப்புகொடி ஊர்வலம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+