ராஜு சகோதரர்களை 3 நாட்கள் விசாரிக்க செபிக்கு அனுமதி!
இதைத் தொடர்ந்து சத்யம் ராமலிங்க ராஜு மற்றும் அவர் தம்பி ராம ராஜு இருவரையும் ஹைதராபாத் சிறையில் வைத்து செபி விசாரணை அதிகாரி சுனில் குமார் அடுத்த மூன்று நாட்களுக்கு விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜு சகோதர்ரகளிடம் சத்யம் மோசடிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த செபி பல முறை ஆந்திரப் பிரதேச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேச அரசு வேண்டுமென்ற தங்களை இழுத்தடிப்பதாகக் கருதிய செபி, உச்சநீதிமன்றத்தை நாடியது.
தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் மற்றும் பி சதாசிவம் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
சத்யம் ராஜுக்களிடம் நேரடி விசாரணை மேற்கொள்வது மோசடிகள் குறித்த முழுமையான முடிவுக்கு வர அவசியம் என்ற செபி தரப்பு வாத்தை ஏற்கொண்ட நீதிபதிகள், ராஜு சகோதரர்களை செபி விசாரிக்க அனுமதி அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று தொடங்கி மூன்று தினங்கள் ராஜுவை ஹைதராபாத் சிறையில் வைத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.