இலங்கை விவகாரம்: உணர்விழந்து விட்டது மத்திய அரசு - அத்வானி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் சற்றும் உணர்வே இல்லாமல் மத்திய அரசு நடந்து வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நேற்று பாஜக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தி்ல் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் தமிழர் பிரச்சினை குறித்து அத்வானி ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் அத்வானி பேசுகையில், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு உணர்வற்ற நிலையில் இருக்கிறது.

மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் அது இலங்கை மண்ணில் இருந்து அகதிகளாக வெளியேறும் தமிழ் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

போர் முனையில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதுஅவசியம் என்று தெரிவித்தார் அத்வானி என தமிழக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+