புலிகளுடன் சண்டை என்ற பெயரில் தமிழினத்தையே அழிக்கிறது இலங்கை: கருத்துக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

Loyola College
சென்னை: விடுதலைப் புலிகளுடன் சண்டை என்ற பெயரில் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தையே இலங்கை அரசு அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பல்வேறு முக்கிய நாட்டு நடப்புகள் குறித்து அவ்வப்போது லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம்.

இந்த நிலையில் பற்றி எறிந்து கொண்டிருக்கும் இலங்கை விவகாரம் குறித்து லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் கலந்து கொண்டவர்களில் 86 சதவீதம் பேர், விடுதலைப் புலிகளுடன் சண்டை, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழினத்தையே இலங்கை அரசு ஒழித்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 90 சதவீதம் பேர் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் ராஜபக்சே அரசு மீது எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை என்று 52 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனி ஈழமே தீர்வு - 68%

தனி தமிழ் ஈழமே இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு என 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக கட்சிகள் இலங்கை விவகாரத்தில் தேர்தல் அரசியலே செய்கின்றன. முதல்வர் கருணாநிதி தலைமையில் அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு தமிழகத்தில் எந்தக் கட்சியும் உண்மையான அக்கறையுடன் செயல்படவில்லை எனவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+