பெற்றோர்களை கவனிக்க மறுத்தால் 3 மாதம் சிறை - அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன்!
சேலம்: பெற்றோர்களை கவனிக்க மறுக்கும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மாவட்ட விழிப்புணர்வு கண்காணி்ப்புக் கூட்டம், மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மத்திய அரசு மிக முக்கியமான ஒரு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
அதன்படி வாரிசுகளுக்கு பெற்றோர்கள் சொத்துக்களை கொடுத்த பிறகு, தங்களது பெற்றோர்களை கவனிக்க மறுக்கும் வாரிசுகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாரிசுகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை திரும்ப பெற்றுத்தர வழிவகை செய்து தரப்படும். தவறு செய்யும வாரிகளுக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ 5000 அபராதம் விதிக்கப்படும்.
முதியோர்களை பராமரிக்க மாவட்டம் தோறும் முதியோர் காப்பகம் அமைக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து நீதி மன்றம் வரை செல்ல தேவையில்லை. மாறாக இந்த புகார்களை மாவட்ட கலெக்டர்களே விசாரணை செய்ய கூடுதல் அதிகாரம் வழங்கப்படுள்ளது என்றார்.