Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர் கட்சியாக இருக்கும்போது மட்டும்...ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுக எதிர்கட்சியாக இருந்த சமயங்களில் மட்டுமே ஆதரவு அளித்துள்ளது. ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில்,

இலங்கை பிரச்சினை தொடர்பாக திமுக செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முடிவுகள் பற்றி நான் எழுப்பிய சந்தேகங்களுக்கும் வினாக்களுக்கும் முதல்வர் கருணாநிதி விடையளித்திருக்கிறார்.

என்னுடைய பெயரைக் குறிப்பிடுவதற்கு மனம் வராத அளவுக்கு அவருக்கு என் மீது ஆத்திரம் உள்ளது. இலங்கையில் அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று செயல்படுங்கள்.

உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்று நான் சொல்வது அவருக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதலை உருவாக்கி அதில் என்னுடைய பலத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறேன் என முதல்வர் வீண் பழி சுமத்துகிறார்.

இப்போது, தமிழக மக்களும் இதைத் தான் விரும்புகிறார்கள்; இப்படித்தான் எண்ணுகிறார்கள் என்று லயோலா கல்லூரி கருத்து கணிப்பு முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறதே, இதற்கு முதல்வர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? யார் மீது பழி சுமத்தப் போகிறார்?

1958ம் ஆண்டில் திமுக அறிவித்த முடிவுக்கும் இப்போது, திமுக செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள முடிவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சுட்டிக்காட்டினால், 50 ஆண்டு காலத்திற்குப் பிறகும் திமுக அதே முடிவில் தான் இருக்கிறது என்பதில் என்ன தவறு உள்ளது என்று முதல்வர் திருப்பிக் கேட்கிறார்.

திமுகவைப் பொறுத்தவரையில், 50 ஆண்டு காலமாக ஒரே முடிவில் இருக்கலாம். அன்றும் இன்றும் ஒரே முடிவிலேயே நிற்கலாம்.

ஆனால், அவர்களது ஒரே நிலைப்பாட்டினால் என்ன விளைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? உங்களது முடிவு இலங்கைத் தமிழர்களை எந்த வகையில் காப்பாற்றியிருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?.

இலங்கைத் தமிழர்களுக்காக திமுக எப்படியெல்லாம் போராடி வந்திருக்கிறது, எப்படியெல்லாம் தியாகம் செய்திருக்கிறது என்ற பட்டியலை கொடுத்திருக்கிறார். 1977ம் ஆண்டிலிருந்து இந்தப் பட்டியல் தொடங்குகிறது.

1987ம் ஆண்டு வரையிலான பட்டியலை உற்று நோக்கினால், தடையை மீறி ஊர்வலம், ரெயில் மறியல், வேலை நிறுத்தப்போராட்டம், முழு அடைப்பு, தொடர் மறியல், மனிதச் சங்கிலி, கண்டனப் பேரணிகள் என அது நீண்டு கொண்டு போகிறது.

1977 முதல் 1987 வரையிலான பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் இருந்தது எம்.ஜி.ஆரின் ஆட்சி; அந்த காலக் கட்டத்தில் திமுக எதிர்க்கட்சி.

இன்றைக்கு எந்தப் போராட்டம் சட்ட விரோதம் என்றும், ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் சதி என்றும் திண்ணையை விட்டு அண்ணனை காலி செய்யப் போடுகிற திட்டம் என்றும் எதைச் சொல்கிறாரோ, அந்தப் போராட்டத்தையும், அதைவிட அதிகமாகவும், வேகமாகவும் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக நடத்தியிருக்கிறது.

அப்படியென்றால், அன்று திமுக நடத்திய போராட்டங்களெல்லாம், இலங்கைத் தமிழர்களின் நலனை காக்க நடத்திய போராட்டங்களா? அல்லது திமுக நலனைக் காக்கவும், அன்று பதவியில் இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கவிழ்க்கவும், கலைக்கவும் நடத்தியப் போராட்டங்களா? என்று உலகத் தமிழர்கள் எண்ணிப்பார்க்க மாட்டார்களா?

1989 முதல் 1991 வரையில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. அந்த இரண்டாண்டு காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக திமுக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. இன்னும் சொல்லப்போனால், இலங்கைத் தமிழர் நலன் காக்க ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட நடத்தவில்லை.

சில சந்திப்புகள் மட்டுமே நடைபெற்றிருக்கிறது. திமுகவின் போராட்டப் பட்டியல், அதாவது தியாகப் பட்டியல் 1991க்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது. 1995ம் ஆண்டில் திமுக நடத்திய முழு அடைப்புடன் அது முடிகிறது.

அந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் பதவியில் இருந்தது அதிமுக ஆட்சி. அப்போதும் திமுக எதிர்க்கட்சி.

இதிலிருந்து என்ன புரிகிறது? திமுக எப்போதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறதோ அப்போதெல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. ஆட்சிக் கட்சியாக மாறிய போதெல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்சினையையும், இலங்கைத் தமிழர் நலனையும் கைவிட்டிருக்கிறது.

எல்லோரும் இணைந்து போராடும் போது, ஆட்சிக்கு ஆபத்து என்று அச்சப்படத் தேவையே இல்லை. ஆனாலும் ஆட்சி பற்றிய பயத்தை விடுத்து முதல்வர் துணிச்சலாகச் செயல்பட வேண்டும் என்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆட்சியை இழக்க நேரிட்டாலும், அடுத்து வரும் தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பெரும்பாலான மக்கள் கருதுவதாக லயோலா கல்லூரிகள ஆய்வு தெரிவிக்கிறது.

தமிழக மக்களின் நாடித் துடிப்பு இதுதான். இதை மனதில் வைத்து முதல்வர் கருணாநிதி செயல்படவேண்டும். இதற்கு மாறாகச் செயல்பட்டால், அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அரசியல் அறிஞரான கலைஞருக்கே அது நன்றாக புரியும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+