தொடரும் இலங்கை கடற்படையின் வெறியாட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. நேற்றும் 30 படகிலிருந்த மீனவர்களை தாக்கி, அரைநிர்வாணமாக்கி அவர்களை கடலில் தள்ளிவிட்டு, தங்களது வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட படகுகளில் தமிழக வீரர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து படகுகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே வந்தனர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் வேகமாக கரை திரும்பினார். ஆனால் விடாப்பிடியாக துரத்திய இலங்கை இனகொலை அரசின் கடற்படை 30க்கும் அதிகமான படகுகளில் வந்த மீனவர்களை சுற்றி வளைத்தது.
அதிலிருந்த மீனவர்களை துப்பாக்கியை மாற்றி பிடித்து தாக்கியுள்ளனர். தலையில் ஐஸ்கட்டியை வைத்தும், அடித்து உதைத்தும் சித்திரவதை செய்துள்ளனர். இதில் பல மீனவர்கள் காயமடைந்தனர். பின்னர் அவர்களை அரை நி்ர்வாணமாக்கி கடலுக்குள் தள்ளிவிட்டனர்.
அடுத்த முறை மீன்பிடிக்க கடலுக்கு வரக்கூடாது என மிரட்டினர். அவர்கள் சென்றவுடன் மீனவர்கள் படகில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.
இது குறித்து பாம்பன் மீனவர்கள் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வத்திடம் புகார் செய்தனர். காயமடைந்த மீனவர்கள் கூறுகையில்,
மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் எங்களை நோக்கி சுட்டனர். கடலில் குதிக்கசெய்து சித்ரவதை செய்தனர். இருந்த நவீன கருவிகளை பறித்த கொண்டனர். அரைநிர்வாணப்படுத்தி நிற்க வைத்தனர். உயிர் மேல் இருந்த ஆசை காரணமாக மீன்பிடிக்காமல் கரை திரும்பினோம் என்றனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications