Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடரும் இலங்கை கடற்படையின் வெறியாட்டம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. நேற்றும் 30 படகிலிருந்த மீனவர்களை தாக்கி, அரைநிர்வாணமாக்கி அவர்களை கடலில் தள்ளிவிட்டு, தங்களது வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட படகுகளில் தமிழக வீரர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து படகுகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே வந்தனர்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் வேகமாக கரை திரும்பினார். ஆனால் விடாப்பிடியாக துரத்திய இலங்கை இனகொலை அரசின் கடற்படை 30க்கும் அதிகமான படகுகளில் வந்த மீனவர்களை சுற்றி வளைத்தது.

அதிலிருந்த மீனவர்களை துப்பாக்கியை மாற்றி பிடித்து தாக்கியுள்ளனர். தலையில் ஐஸ்கட்டியை வைத்தும், அடித்து உதைத்தும் சித்திரவதை செய்துள்ளனர். இதில் பல மீனவர்கள் காயமடைந்தனர். பின்னர் அவர்களை அரை நி்ர்வாணமாக்கி கடலுக்குள் தள்ளிவிட்டனர்.

அடுத்த முறை மீன்பிடிக்க கடலுக்கு வரக்கூடாது என மிரட்டினர். அவர்கள் சென்றவுடன் மீனவர்கள் படகில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.

இது குறித்து பாம்பன் மீனவர்கள் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வத்திடம் புகார் செய்தனர். காயமடைந்த மீனவர்கள் கூறுகையில்,

மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் எங்களை நோக்கி சுட்டனர். கடலில் குதிக்கசெய்து சித்ரவதை செய்தனர். இருந்த நவீன கருவிகளை பறித்த கொண்டனர். அரைநிர்வாணப்படுத்தி நிற்க வைத்தனர். உயிர் மேல் இருந்த ஆசை காரணமாக மீன்பிடிக்காமல் கரை திரும்பினோம் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+