ஆறு வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி பரிதாப பலி !
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஆறு வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானான்.
விழுப்புரம் அடுத்த திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ளது தி.மழவராயனூர்.
இந்த ஊரைச் சேர்ந்த பப்பு என்பவரின் மகன் கல்பேசி (6). இவன் அந்த ஊரில் உள்ள மலட்டாற்றில் குளிக்க தனது நண்பர்கள் ஐந்து பேர்களுடன் உற்சாகமாக சென்றுள்ளான்.
அப்போது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது கல்பேசி திடீரென காணவில்லை.
இந்த நிலையில், கல்பேசியின் உடல் திருவெண்ணை நல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி அருகில் உள்ள ஆற்றின் கரையில் ஒதுங்கியிருந்ததாக தகவல் பரவியது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்பேசியின் படலை கைப்பற்றினர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக திருவெண்ணை நல்லூர் பகுதியில் இந்த ஆற்றில் குளிக்க சென்ற பலர் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க மாவட்ட கலெக்டர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications