ராமேஸ்வரம் கடல் பகுதியில் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் ரோந்து தீவிரம்
ராமேசுவரம்: இலங்கையில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் விடுதலைப் புலிகல் ஊடுறுவி விடாமல் தடுக்கும் வகையில் விமானப்படை விமானங்களும், போர்க் கப்பல்களும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுறுவலாம் என கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 4 போர்க்கப்பல்கள் 500-க்கும் மேற்பட்ட கமாண்டோ படைவீரர்களுடன் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றன.
ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் என பாக்ஜலசந்தி கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெப்பாகாத்தூன் போர்க்கப்பலும், ராணிஜிந்தன் போர்க்கப்பலும், இந்திய கடற்படைக்கு சொந்தமான டி.59 என்ற அதிநவீன போர் கப்பலும் ரோந்தில் ஈடுபட்டுள்ளன.
மன்னார்வளைகுடா கடல்பகுதியில் தூக்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய கடற்படை ஹெலிகாப்டர், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்றும் கடலில் தாழ்வாக பறந்து கண்காணித்து வருகிறது.
மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான தரையிலும் தண்ணீரிலும் அதிவேகமாக செல்லக்கூடிய 2 ஹோவர்கிராப்ட் ஐ.சி.181, 183 ஆகியவையும் 24 மணிநேரமும் கடலில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் அடையாள அட்டைகள், படகுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கியூபிரிவு போலீசார் கடலோரபகுதியில் ரோந்து சென்று இலங்கையில் இருந்து யாரும் தப்பி வருகிறார்களா? இலங்கைக்கு பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா? என்று கண்காணித்து விசாரணை நடத்தினர்.
-
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications