எருமை மாடு மீது மோதிய ரயில் - தடம் புரண்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே எருமை மாடு மீது மின்சார ரயில் மோதி தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏதும் இல்லை.
செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்கு இன்று காலை மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கூடுவாஞ்சேரி அருகே லெவல் கிராசிங்கை ரயில் நெருங்கியபோது திடீரென ஒரு எருமை மாடு குறுக்கிட்டு விட்டது.
இதையடுத்து மாட்டின் மீது ரயில் மோதியது. மோதிய வேகத்தில் மாடு தூக்கி எறியப்பட்டு விட்டது. ரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி நின்றது.
அதிர்ஷ்டவசமாக இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் இல்லை. மாடு உயிரிழந்தது.












Click it and Unblock the Notifications