For Daily Alerts
Just In
பாதுகாப்புக்கு விடப்படும் சவாலை சந்திக்க இந்தியா தயார்: அந்தோணி
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அந்தோணி பேசுகையில், எந்தப் பகுதியிலிருந்தும் நாட்டுக்கு விடுக்கப்படும் பாதுகாப்பு மிரட்டலை சந்திக்க நாம் தயாராக இருக்கிறோம். அதை சமாளிக்கும் திறமையும் நம்மிடம் உண்டு.
நமது படைகள் எத்தகைய சவாலையும், மிரட்டலையும் சந்தித்து, சமாளிக்கும், முறியடிக்கும் திறமை படைத்தவர்களாக உள்ளனர்.
அல் கொய்தா அமைப்பு இந்தியாவுக்கு விடுத்துள்ள மிரட்டல் குறித்து நான் முழுமையாக பார்க்கவில்லை என்றார் அவர்.
ஆப்கானிஸ்தானுக்கான அல் கொய்தா தீவிரவாத பொறுப்புத் தலைவரான முஸ்தபா அபு யாசித் பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், மும்பை ஸ்டைல் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ள நிலையில் அந்தோணி இந்த பதிலை அளித்துள்ளார்.
Story first published: Tuesday, February 10, 2009, 17:28 [IST]