அமரேசன், பாண்டியன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முதியவர் அமரேசன் மற்றும் திமுகவின் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரணியில் மாரடைப்பால் இறந்த மன்னை பாண்டியன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர், மன்னை பாண்டியன் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரணியில் உணர்ச்சி மிகு முழுக்கங்களை உரக்க ஒலித்துச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்து மாண்டார் எணும் செய்தி படித்தும்,
கட்சி சார்பற்ற அமரேசன் போன்ற தமிழர்கள் தீக்குளித்து மாண்ட செய்தி கேட்டும் பெருந்துயரம் கொண்டு, என் ஆழ்ந்த இரங்கலை அவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications