தீக்குளித்து உயிர் நீப்பதை இளைஞற்கள் தவிர்க்க வேண்டும்: சரத்

Subscribe to Oneindia Tamil

Sarath kumar
சென்னை: இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இளைஞர்கள் தீக்குளித்து தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உயிரிழந்த முத்துக்குமார், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் பட்டியலில் வண்ணாரப்பேட்டை அமரேசனும் சேர்ந்துள்ளது மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

துரதிருஷ்டவசமாக அடுத்தடுத்து தீக்குளித்து உயிர் தியாகம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. பொதுமக்கள் தங்கள் உணர்வுகள் எல்லை மீறும்போது வேறுவழியின்றி தங்களை மாய்த்துக் கொள்ளும் நிலை மேலும் தொடரக் கூடாது.

நாம் அனைவரும் நடத்தி வரும் உணர்வுமிக்க போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் நிச்சயம் விரைவில் நல்ல விடை கிடைக்கும். நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு விரைவில் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போராடி வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+