கொல்லப்பட்ட சைமனின் உடலை வழங்க தீவிரவாதிகள் பேரம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக ஊழியர் சைமனின் உடலை ஒப்படைக்க வேண்டுமானால், பணம் கொடுக்க வேண்டும், தங்களது தலைவனின் மகனை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என தலிபான் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனராம்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சைமன், ஆப்கானிஸ்தானில் பேக்கரி கடையில் சமையலராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி பக்ராம் விமான தளத்திற்கு உணவு சப்ளை செய்யச் சென்றபோது அவர் உள்பட 3 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
சைமனை மீட்கும் முயற்சியில், காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் நேற்று சைமன் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது.
இது கள்ளக்குறிச்சி அருகே பிரம்மகுண்டம் கிராமத்தில் வசித்து வரும் அவரது குடும்பத்தினரை இடி போல தாக்கியது. சைமனின் மனைவி வசந்தி, தாயார் அழகம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் காபூலில் உள்ள சைமனின் அண்ணன் சுப்ரமணியத்தை தீவிரவாதிகள் நேற்று தொடர்பு கொண்டு உடல் வேண்டுமானால் பணம் தர வேண்டும், சிறையில் உள்ள எங்களது தலைவரின் மகனை விடுவிக்க வேண்டும் என பேரம் பேசி வருகின்றனராம்.
இதனால் சைமனின் குடும்பத்தினர் உடல் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
உயிரைத்தான் பறித்து விட்டனர், உடலையாவது தீவிரவாதிகள் கொடுக்க முன்வர வேண்டும். அதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் உதவ வேண்டும் என சைமனின் மனைவி வசந்தி கதறலுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சைமன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் உதவி
இதற்கிடையே, சைமனின் படுகொலைக்கு முதல்வர் கருணாநிதி அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். சைமன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சைமன் என்பவர் ஆப்கானிஸ்தானத்திற்கு வேலைக்கு சென்றிருந்தார். அங்கு அவர் தலீபான் தீவிரவாதிகளால் பிணையக் கைதியாகக் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியுற்ற தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, சைமன் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவரது குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications